திருநெல்வேலி மாவட்டம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர் செம்மல் விருது வழங்கி கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திரு சுப்பையா அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
.அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் மீனாட்சி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) திரு அண்ணாதுரை அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி உட்பட 60 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கல்விச்செம்மல் விருதுகளை பெற்றனர்.
கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
CATEGORIES திருநெல்வேலி
