மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரு கரைகளையும் கடக்கக்கூடிய வைகை ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன
மாலை நேரத்தில் ஆட்டோக்கள் பள்ளி வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும் போது அண்ணாசிலையில் இருந்து தேவர் சிலை நோக்கி சென்ற டாட்டா ஏசி இருசக்கர வாகனம் மீதுமோதியதில் பைக்கில் வந்த தம்பதியினர் காயமின்றி தப்பித்தனர்
அடுத்த நொடியில் அதன் பின்னாடி வந்த ஆட்டோ எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியது இதில் மதுரையைச் சேர்ந்த வாலிபர் பலத்த காயங்களுடன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அதே ஆட்டோ சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு பைக் மீது மோதியது இதில் பயணம் செய்த பெண் ஒருவர் காயமின்றி தப்பினார் ஆனால் இருசக்கர வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளது
இதனால் சிறிது நேரம் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.
