BREAKING NEWS

கோவில்பட்டியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!.

கோவில்பட்டியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

 

கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை பசுவந்தனை போலீசார் விசாரணை!.

 

 

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பசுவந்தனை உள்ள சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் ‌ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி என்ற மாணவி அதே பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

 

 

இந்த மாணவி இன்று இரவு பள்ளி கழிவறையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

 

தகவல் அறிந்து வந்த பசுவந்தனை காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

 

இதுகுறித்து மணியாச்சி நூரல் டிஎஸ்பி லோகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

 

 

 

மேலும், பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )