தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து நீர்தேக்கதொட்டியை அகற்றகோரி சிவசேனா கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் புத்தியால்.
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டில் உள்ள சமதர்மபுரத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து.
உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் சார்பாக நீர் தேக்க தொட்டியை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்து வந்த நிலையில் நகர் மன்ற கூட்டத்தில் நீர்த்தேக்க தொட்டியை அகற்றக்கோரி கடந்த சில வாரங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தற்போது வரை நீர்த்தேக்க தொட்டியை அகற்றாமல் உள்ளதால் எந்த நேரமும் நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும் நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக அகற்றக்கோரி இன்று சிவ சேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் கார்த்திக் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கின்றோம் அகற்றிடு அகற்றிடு,
நீர்தேக்கதொட்டியை அகற்றிடு கவனம் செலுத்து கவனம் செலுத்து மக்கள் மீது கவனம் செலுத்து உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.