கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது.
நலமான குழந்தைகள் வளமான தமிழகம் என்ற நிலையை உருவாக்கும் நோக்குடன் தாய் சேய் நலனுக்கு ஆதாரமாக 1000 தங்க நாட்கள் என்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
தேசிய ஊட்டசத்து தூண்டுதல் என்ற கருத்துருவின் அடிப்படையில் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முழுவதும் பல்வேறு வகையான ஊட்டசத்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஓரு பகுதியாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கமுதி வட்டாரத்தின் மகளிர் திட்டத்தின் உள்ள மகளிர் குழுக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஊட்டசத்து உணவு கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ஊட்டசத்து சம்மந்தமான கோலப்போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது விழாவில் ஊட்டசத்து உறுதிமொழி எடுக்கபட்டது .
இவ்விழாவிற்கு கமுதி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை தாங்கினார் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக வட்டார வளா்ச்சி அலுவலர்கள் மணிமேகலை மற்றும் ராஜகோபால் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா் அசோக், மற்றும் மகளிர் திட்ட வட்டார மேலாளர் மயில்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினா்களை சரசு வரவேற்று பேசினார் விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனர்.
வட்டார திட்ட உதவியாளர் கணகவள்ளி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளா்கள் ஏற்பாடு செய்தனர்.