தேனி மாவட்டம் போடியில் யோகா கின்னஸ் சாதனை

தேனி மாவட்டம் போடியில் ஜாகாநி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேச பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஓம் போஸ் யோகாவில் ஒரு மணி நேரம் 9 நிமிடம் 37 வினாடிகள் யோகா நிலையிலிருந்து முந்தைய உலக சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
தேனி மாவட்டம் போடி புதூர் பகுதியை சேர்ந்த முருகன் மகேஷ் தம்பதியர் தினக்கூலி தொழிலாளர்கள் இவர்களது மகனான பாலகணேஷ் போடியில் ஜகாநி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் யோகாவில் சிறந்த ஈடுபாடு உள்ளதால் 10 ஆண்டுகளாக தினமும் இரண்டு மணி நேரம் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார்.
இதை அறிந்த பள்ளி நிர்வாகமும் யோகா பயிற்சி ஆசிரியர் ஸ்ரீதாவும் இணைந்து சுமார் இரண்டு மாத பயிற்சியின் காரணமாக இன்று தனது பள்ளியில் சாதனை முயற்சியில் கின்னஸ் பார்வையாளர்கள் முன்னிலையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு,
தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடம் 37 வினாடியில் வரை கர்ப்ப பிண்ட ஆசனம் எனும் ஓம் போஸ் யோகாவை செய்து அதன் முந்தைய சாதனையான அமெரிக்கா வாசிங்டன் பகுதியை சேர்ந்த தீபேஸ் ஜெயக்குமார் என்பவரின் 42.11 நிமிட சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றார்.
இதை அடுத்து தேச பிதா காந்தி பிறந்த தினத்தில் புதிய சாதனை படைத்த மாணவர் பாலகணேசுக்கு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.