தொழுதூர் அருகே மனுநீதி நாள் முகாம் அமைச்சர் சிவி.கணேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் விஜய்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் ஊராட்சியில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி பாலசுப்பிரமணியம் இ.ஆ.ப., தலைமையில் மனுநீதி நாள் முகாம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி. கணேசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு 30 நாட்களுக்குள் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியில், மாண்புமிகு முதலமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழக மக்களின் துயர் தீர்க்கும் அனைத்து வகை, திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம், குறிப்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்,..
கால்நடைத்துறை, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல்வேறு நிகழ்வுகளை மிகச் சிறப்பாக பணியாற்றி ஒழுங்குபடுத்தி, முறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
முதலமைச்சரின் ஆணைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், என்ற கூற்றின்படி கொரோனா பெருந்தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்தியதும் காப்பாற்றியதும் நமது தளபதியாட்சி, இல்லம் தேடி மருத்துவம் திட்டம் மூலமாக மருத்துவர்கள் நேரடியாக வீட்டுக்கே வந்து மருத்துவம் பார்ப்பது,..
நமது தளபதி ஆட்சியில் மட்டுமே நடக்கும், இதுவரை இத்திட்டத்தின் மூலமாக, 85 லட்சம் பேருக்கு தற்போது வரை மருத்துவம் பார்க்கப் பட்டுள்ளது. இதனை பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முதியோர் உதவித் தொகை திட்டத்தில் நின்று போன, உதவித்தொகை வழங்கப்படாத அனைத்து பயனாளிகளுக்கும் தற்போது முதியோர் உதவித்தொகை வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்றும், இன்றைய தினமே சுமார் 500 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பட்டா மாற்றம் மற்றும் பிற சான்றிதழ் பெறுவது எளிதாகப் பட்டுள்ளது, மேலும் தொகுதிக்காக செய்ததும் செய்யப் போவதும் சிலவற்றை குறிப்பிட்டு தகவலாக கூறினார். அப்போது 130 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வெலிங்டன் நீர்த்தேக்கத்தை தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேப்பூரில் இருந்து தொழுதுர் வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் அதிகம் விபத்துக்கள் நடைபெறும் பகுதி என்பதால் அவசர சிகிச்சை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பம் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை உருவாக்கப்படும்,
உப்புத்தண்ணி பிரச்சினையால் அதிக நபர் இறக்கும் சூழ்நிலை உள்ளது இதனை தீர்ப்பதற்கு திட்டக்குடி மருத்துவமனையில் டயாலிசிஸிஸ் சென்டர் உருவாக்கப்படும்.
ஒரங்கூரில் புதிய மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தடுப்பணைகள், சிறு பாலங்கள் கட்டப்படும், தொழுதூரிலிருந்து வள்ளி மதுரம் பட்டாக்குறிச்சி வழியாக பெங்களூருக்கு நேரடி பேருந்து வசதி, அகரம் கிராமத்திலிருந்து நிதிநத்தம், சிறுமுளை, பெருமுளை வழியாக பழனிக்கு நேரடி பேருந்து வசதி,
முருகன் குடியிலிருந்து பாசி குளம் பெளாந்துறை வழியாக திருப்பதிக்கு நேரடி பஸ் வசதி, கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. போன்ற பல திட்டங்களை பட்டியலிட்டு பயனாளிகளுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பாவனர், மாவட்ட வருவாய் அலுவலர், விருத்தாச்சலம் சப் கலெக்டர் பழனி, திட்டக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் காவியா, தனித்துனை ஆட்சியர் கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன், பிஆர்ஓ சுப்பையா, ஏபிஆர் ஓ பாலமுருகன், திட்டக்குடி வட்டாட்சியர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மங்களூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுகுணா சங்கர்,
ஒன்றிய குழு துணை தலைவர் கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர்கள் செல்வி ராஜரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், பாவாடை கோவிந்தசாமி, மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.