BREAKING NEWS

பணியிடம் குறைப்பை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி முன்பு நடைபெற்றது.

பணியிடம் குறைப்பை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி முன்பு நடைபெற்றது.

 

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க திருநெல்வேலி மாநகராட்சி கிளை சார்பாக மக்களின் அடிப்படை பணிகள் செய்து வரும், தூய்மைபணி, தெருவிளக்கு பராமரிப்பு,

குடிநீர் வழங்கல், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், வரிவசூல், பதிவரை எழுத்தர், அலுவலக

உதவியாளர், ஓட்டுனர்கள், இரவு காவலர், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர், மருத்ததுவர்கள்,

நகர சுகாதார செவிலியர்கள், சமுதாய அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப துறை

பணியாளர்களின் பணி பாதுகாக்கப்பட வேண்டிய பணியாகும்.

இத்தகைய பணியிடங்கள் குறைப்பால் அடிப்படை கல்வித்தகுதி உடைய பட்டியலின

மக்களின்

அரசு

வேலை மறுக்கப்படுவதுடன் கருணை அடிப்படை பணி வாய்ப்புகள் இல்லாமல் போகும் சூழல் உருவாகும்.

மாநகராட்சியில் 3500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை 3417ஆக குறைக்கும் வகையில் 20.10.2022ல்

வெளியிடப்பட்டுள்ள அரசாணை 152-ஐ தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்பு

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்

மாநகராட்சி, நகராட்சிகள்

 அலுவலர் சங்க தலைவர் என்.ராதகிருஷ்ணன் வரவேற்று பேசினார்

அமைச்சுப் பணியாளர் சங்க தலைவர்

எஸ். முத்துதுரை,

 ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க

மாவட்டப் பொதுச்செயலாளர்

மாரியப்பன்,

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)

மாவட்டத்தலைவர்

எம்.பீர் முகமது ஷா,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க

மாவட்ட இணை செயலாளர்

கு. சேரந்தைய ராஜா,

அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் வீ.பார்த்தசாரதி,

வருவாய் உதவியாளர் எம்.மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி தெருவிளக்கு,சாலை மற்றும் குடிநீர் பராமரிப்பு பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஐவன் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )