ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஒசூர் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் சந்திரன் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். இதில் நூற்றுக்கணக்கான மாநகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனர்.
மக்களின் அடிப்படை பணிகளை செய்து வரும் தூய்மைப் பணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீா் வழங்கல், தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள், வரிவசூல், பதிவறை எழுத்தாளர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர்கள், காவலர், தரவு உள்ளீட்டாளர்கள் பட்டியலின மக்களின் அரசு வேலை மறுக்கப்படுவதுடன், கருணை அடிப்படையிலான 35,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை 3,417-ஆக குறைக்கும் அரசாணை 152-ஐ தமிழக அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மேலாளா் சரவணன், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், முரளி, சிவா, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.