BREAKING NEWS

கடலூர் வேப்பூரில் சேரும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் அவதி.!

கடலூர் வேப்பூரில் சேரும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் அவதி.!

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர் ஊராட்சியில், கூட்ரோடு பகுதியில் பேருந்து நிலையம் பின்புறம், அய்யனார் மெட்ரிகுலேஷன் பள்ளி பின்புறம், ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்,ஆறுமுகம் தெரு, ஆடலரசன் நகர், போன்ற சுமார் 5,000 பேர் குடியிருந்து வருகின்றனர். 

 

 

இந்நிலையில் அப்பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக தெருக்கள் முழுவதும் சேரும் சகதியுமாக, இருசக்கர வாகனம் சென்று வர முடியாமலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும் மிகச் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

 

குறிப்பாக சிறிய மழை பெய்தாலே அங்கு குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது என்றும் இதனை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

எனவே இந்த நிலையை போக்கிட தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தரவும், வடிகால் வாய்க்கால்கள் அமைத்து தரவும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )