BREAKING NEWS

பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த உப்பாத்து ஓடை தனியார் பங்களிப்புடன் 4 கிமீ தூரம் தூர்வாரும் பணி – மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். 

பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த உப்பாத்து ஓடை தனியார் பங்களிப்புடன் 4 கிமீ தூரம் தூர்வாரும் பணி – மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். 

தூத்துக்குடி மாவட்டம்,

      

தூத்துக்குடி அருகே உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணியுனை கடந்த வாரம் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பணியானது மும்முரமாக செயல்படுகிறதா? என மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டார்.

 

 

மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் பகுதியில் இருந்து மழை தண்ணீரானது, உப்பாத்து ஓடை வழியாக கடலில் கலக்க கூடிய அந்த கண்மாயை கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

 

 

தூத்துக்குடி மாநகரத்தில் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மழை தண்ணீர் தேங்கி நின்றது.

 

இதற்கு முதல் காரணம் புதூர் பாண்டியாபுரம், சங்கரப்பேரி ஆகிய பகுதியில் இருந்து வருகின்ற தண்ணீர் உப்பாத்து ஓடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இவ்வழியாக கடலில் கலக்காமல் ஊருக்குள் வரும் நிலை ஏற்ப்பட்டு அதன் காரணமாக மாநகரில் அதிக அளவு பகுதிகளில் மழை நீர் அதிகமாக தேங்கியது.

 

 

இப்போது ஒட்டப்பிடாரத்தில் இருந்து புதூர் பாண்டியாபுரம், வெள்ளப்பட்டி, மாப்பிள்ளையூரணி வழியாக சென்று கடலில் கலக்கும். இந்த ஓடையானது, பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தூர்வார நான்கு கிலோமீட்டர் தூரம் வரை தூர்வாரும் பணி தனியார் பங்களிப்புடன் நடைபெற்றதாக கூறினார்.

 

கப்பல்கள் மூலமாக யூரியா வந்து இறங்க உள்ளதாகவும், கூட்டுறவு அமைப்புகள் மூலமாக விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு தட்டுபாடு இன்றி உரம் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.    

    

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )