BREAKING NEWS

15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை.

15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வடகாடு வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கல்லணையிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்லணை கால்வாய் ஆறானது 100 ஆண்டுகள் பழமையானதாகவும் இந்த வாய்க்கால் வெட்டும் போது பல இடங்களில் ஊற்று பாலங்கள் கட்டப்பட்டன இதில் பல பாலங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு வடகால் வாய்க்கால் பாலம் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை.

 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் சிதிலமடைந்தது கஜா புயலின் போது பாலத்தில் ஒரு பகுதி உடைந்தது. இதை அடுத்து புயலில் விழுந்த தென்னை மரங்களை பாலத்தின் உடைப்பு பகுதியில் போட்டு விவசாயிகள் அடைத்து வைத்துள்ளனர்.

 

 

புதியதாக பாலம் கட்ட வேண்டுமென கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை இதனால் வயல் உள்ளிட்ட விலை நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியவில்லை கண்ணுக்குடி தொண்டராம்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மாணவ மாணவிகள் ஆபத்தான நிலையில் இந்த பாலத்தை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

 

பாலம் முழுமையாக இடிந்து விட்டால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும் எனவே உடனடியாக புதிய பாலம் கட்டித் தர விவசாயிகளும் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )