தூத்துக்குடி வந்த தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி; காவல்துறை குறைப்பாடால் விமான நிலையத்தில் களவபரம்!

தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வந்தடைந்தார்.
இவரை வரவேற்க ஏராளமான இளைஞர்கள் கூடினர். அப்போது காவல்துறை குறைபாட்டால் இளைஞர்களிடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மேலும், விமான நிலையத்தில் அலங்காரதிற்கு வைக்கப்பட்ட கருங்கல்ளிலான 4 அடி கல் சிலை, பூந்தொட்டிகள் உடைந்தது. இதனால் விமானத்தில் வந்த பயணிகள் இதனை பார்த்து முகம் சுளித்து கொண்டு கடந்து சென்றனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அரசியல்உதயநிதி ஸ்டாலின்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி விமானநிலையம்முக்கிய செய்திகள்