BREAKING NEWS

உயர்ரக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போடும் பலே திருடனின் சிசிடிவி காட்சிகள் வைரல்..

உயர்ரக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போடும் பலே திருடனின் சிசிடிவி காட்சிகள் வைரல்..

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு மாவட்டம். 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தென் மாவட்டத்திலிருந்தும் வடமாநிலத்தில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர் அவர்கள் பெரும்பாலும் சைக்கிள்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

 

உயர்ரக சைக்கிள்களை குறிவைத்து நோட்டமிட்டு முறையாக திட்டமிட்டு போன் பேசுவது போல் பேசிக்கொண்டே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சைக்கிளை லாவகமாக தனது சொந்த சைக்கிளை எடுத்து செல்வது போல சர்வ சாதாரணமாக எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

 

இதுபோன்ற உயர்ரக சைக்கிள்களை குறிவைத்து திருடி மது அருந்துவதற்காக 2ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்த விலைக்கு வடமாநிலத் தவர்களிடம்
விற்றுவிடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மறைமலைநகர் நந்தனார் தெரு பகுதியில் செருப்பு கடை நடத்தி வருபவர் ஏழுமலை என்பவர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சைக்கிளில் சென்று உள்ளார்.

 

அப்போது வீட்டின் வெளியே சைக்கிளை நிறுத்தி விட்டு சாப்பிட்டவுடன் திரும்ப கடைக்கு செல்ல வெளியே வந்து பார்த்தபோது சைக்கிள் திருடு போனது தெரியவந்தது.
உடனே வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பட்ட பகலிலே லாவகமாக இளைஞர் ஒருவர் சைக்கிளை திருடி சென்ற காட்சி பதிவாகியுள்ளது.

 

இதேபோல் கடந்த 1 வாரத்திற்கு முன்பாக அதே பகுதியில் ஒரு சைக்கிள் திருடு போனது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று சைக்கிளை மட்டும் குறி வைத்து திருடும் மர்ம கும்பல் மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் குறிவைத்து திருடுகிறார்கள். காவல்துறை இரவு நேரம் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் ரோந்துபணியில் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )