பவானி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சுப்பராயன் தலைமை வகித்தார். பவானி நகரமன்ற தலைவர் திருமதி சிந்தூரி இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பவானி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை எம்பி சுப்பராயனிடம் வழங்கினர். மனுக்களை பரிசுத்த எம் பி தங்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பவானி நகர திமுக செயலாளர் நாகராசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மாதேஸ்வரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகர், பவானி நகரமன்ற துணை தலைவர் மணி மற்றும் தோழமை கட்சியின் நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.