பொது சுகாதாரம் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சையில் மாரத்தான் போட்டி.

தஞ்சாவூர்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர். காந்திஜி சாலை உளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்று மீண்டும் பெரிய கோவிலுக்கு வந்தடைந்தது.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS சேலம் மாவட்டம்தஞ்சாவூர் பெரியகோவில்தஞ்சையில் மாரத்தான் போட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறைமுக்கிய செய்திகள்