70 அடி உயர கம்பத்தில் முதல்வர் தி.மு.கழக கொடி ஏற்றினார்.

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சிவி நகர் பகுதியில் கழக கொடியை 70 அடி உயர கொடி மரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.கழக கொடியை ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணைப் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜா, தி.மு.கழக முதன்மைச் செயலாளர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரச் செயலாளர் மு.மதிவானன் கிழக்கு தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன்,
கே.என்.சேகரன், என்.கோவிந்தராஜன் குணசேகரன்,
செந்தில் பகுதி கழகச் செயலாளர் மோகன், தர்மராஜ், மணிவேல், நீலமேகம், திருவெறும்பூர் ஒன்றிய சேர்மன் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.