BREAKING NEWS

நிலக்கோட்டை- அதிமுக தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்.

நிலக்கோட்டை- அதிமுக  தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி ,வடக்கு ஒன்றிய செயலாளர் மாயி மற்றும் மாவட்டச் செயலாளர் வைகை பாலன் தலைமையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அம்மையாரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பள்ளப்பட்டி 12வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் பேசியதாவது.. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் கட்டப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வழிகாட்டுதலின் படி மறைந்த முன்னாள் முதல்வரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மாவட்டச் செயலாளர் வைகை பாலன்,

 

 

நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி, நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் மாயி அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அண்ணன் ஓபிஎஸ் அவர்களே மீண்டும் தமிழக முதல்வராக வருவதற்கு இந்நேரத்தில் சூளுரைத்துக்கொள்கிறோம்.

 

 

மேலும் ஓபிஎஸ் அவர்களின் கரம் கோர்த்து மீண்டும் அதிமுக ஆட்சியே மலரச் செய்ய பாடுபடுவோம் என இத்தருணத்தில் கூறிக் கொள்கிறோம் என கூறினார்…. உடன் நிகழ்வில் ஒன்றிய அமைப்புச் செயலாளர் கவிஞர் ஒச்சப்பன், நிர்வாகிகள் பராசக்தி, முத்தையா, சிவஞானம், செல்வம், கண்ணன், முத்துராஜ், அறிவு மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )