BREAKING NEWS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேரணி  நடைபெற்றது.

தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இருசக்கர வாகனத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார்!.

 

இப்பேரணியில், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ தலைமையில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் முன்னிலையில், பேரணியானது நடைபெற்றது. இப்பேரணியை ஆணையர் சாரு ஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

பின்னர், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி RTO விநாயகம், ஆகியோர் ஆயுதப்படை வளாகத்தில் இருந்து முத்து நகர் கடற்கரை வரை (5 கிலோ மீட்டர்) தூரம் இரு சக்கர வாகனத்தில் பேரணி மேற்கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

கடந்த மாதம் சீட் பெல்ட், ஹெல்மட் அணிவது குறித்த விழிப்புணர்வு, ஆட்டோ விழிப்புணர்வு போன்ற தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பெயரில், இன்று காவல்துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை மூலம் விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வை பறைசாற்றும் விதமாக இன்று இரு சக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வோரு வருடமும் 350 முதல் 390 வரை இறப்புகள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 14,000 முதல் 15,000 வரை சாலை இறப்புகள் விகிதம் உள்ளது.

 

இதனை தடுக்கும் பொருட்டு, பல்வேறு துறைகளான, வருவாய் துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி அமைப்புகள் சேர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், பொது மக்கள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ஆட்டோ ஓட்டுநர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் சாலை விபத்து மரணம் கணிசமாக குறைக்கலாம் என கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )