2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழக அரசின் அறிவிப்பால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், 2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது. இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற அச்சத்துடன் இருந்த இப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பாக கிராம மக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் பீட்டா வழக்கு உள்ளதால் எங்கே ஜல்லிக்கட்டுக்கு தடை வந்து விடுமா என்ற அச்சத்துடன் இருந்த தங்களுக்கு தமிழக அரசின் இந்த அறிவிப்பு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் அரசின் முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் எனவும் விழா குழுவினர் தெரிவித்தனர்.