நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.

செய்தியாளர் மணிகண்டன்.
தென் தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று வீசும் மோசமான வானிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை. இதனால் 10 கிராம கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் நிறுத்தி வைப்பு.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, தென்தமிழக கடற்கரைப்பகுதி மற்றும் தென்மேற்கு வங்ககடற்பகுதிகளில்
சுழல் காற்றானது மணிக்கு 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை வீசக்கூடும்.
எனவே நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 21ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று ராதாபுரம் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட பத்து கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அனைத்து கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டநாட்டு படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.