BREAKING NEWS

கவுன்சிலர் ஆக்கிரமிப்பு கடை காவல்துறை உதவியுடன் அகற்றப்பட்டது.

கவுன்சிலர் ஆக்கிரமிப்பு கடை காவல்துறை உதவியுடன் அகற்றப்பட்டது.

 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி வந்து வார்டு கவுன்சிலர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ரோட்டை மறைத்து ஆக்கிரமிப்பு கடை நடத்தி வந்தார்.

 

 

இதனால் போக்குவரத்து இடையூராக இருந்தது. கவுன்சிலர் என்பதால் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூராக கடை நடத்தி வந்தார். இதனால் பொதுமக்கள் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் புகார் தெரிவித்தனர்.

 

 

முதலமைச்சர் தனிப்பிரிவு புகாரை தொடந்து அதிகாரிகள் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்த கடையை JCB வாகனங்கள் கொண்டு வந்து அகற்றி விட்டனர். விரைவாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள். இனி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதால் மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS