கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் கருத்து மோதல் வாக்குவாதம்.

கும்பகோணம்
மாநகராட்சி கூட்டத்தில் மேயர் கேள்வி எழுப்பியதால் துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கருத்து மோதல் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு மணிநேரம் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரின் (திமுக) சுப. தமிழழகன் பிறந்தநாளில், அவரை மாநகராட்சியின் செயல் தலைவரே என குறிப்பிட்டு 12வது வட்ட மாமன்ற உறுப்பினர் (திமுக) சந்தோஷ், போஸ்டர் ஒட்டியது குறித்து மேயர் (காங்) கே சரவணன் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில்,..
மேயர் கேள்வி எழுப்பியதால் துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டதால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைப்பட்டது.
திமுக துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கருத்தை மேயர் திரும்ப பெறாவிட்டால், நாங்கள் கூட்டத்தை விட்டு வெளியேறுவோம் நீங்கள் எப்படி தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள் என பார்ப்போம் என நிர்பந்தம் செய்ததாலும்,
மேயரில் கருத்திற்கு ஒரு உறுப்பினர் கூட ஆதரவு தெரிவிக்காத நிலையில், வேறு வழியின்றி மேயர் தனது கருத்தை திரும்ப பெற்றதை தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு, கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
துணை மேயர் சுப தமிழழகன், எனக்கு பதவி பெரியதல்ல, நான் கட்சிக் கொள்கைக்கும், கட்சித் தலைவனின் வார்த்தைக்கும் கட்டுப்பட்டவன் என்றும்,
முதன்முறையாக துணை மேயர் பணியேற்ற பின், மேயருடன் தலைவரை சந்திக்க சென்ற போது, என்னிடம், தமிழ் வருத்தமா ?என கேட்டதற்கு எதுவும் ஒப்பாகாது என கண்கலங்கியதுடன், ரியல் மேயர் தான் செயல் தலைவராக இருக்க முடியும் என துணை மேயர் கூறினார்.