BREAKING NEWS

பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

 

 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளியாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளில் அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்றாக பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டது.

 

தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு மற்றும் தங்கரதம் அரிமா சங்கம் சார்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

 

 

இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்களான தலைமை ஆசிரியர் ராதா ஆசிரியர்களான பிரேமலதா, சித்ரா, ஜெயஜோதி, செல்லம், ஷோபா, புவனேஸ்வரி, வைலட்ராணி, கற்பகம், காந்திமதி, பீட்டர் ஜான்சன், ஆகியோர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

 

 

 தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக சித்த மருத்துவர் மகேந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர் தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் தங்கரதம் அரிமா சங்கத்தைச் சேர்ந்த தலைவர் முருகன், செயலாளர் பாலசுப்பிரமணி, பட்டயத்தலைவர் மனோகரன், பட்டய செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 தொடர்ந்து பள்ளி வளாகம் தூய்மை பேணுதல், கழிப்பிடம் சுத்தமாக வைத்தல், தரமான கல்வி வழங்குதல், மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் நடைபெற்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக நகராட்சி நடுநிலைப்பள்ளி தேர்வு தேர்வாகியுள்ளது. என பெருமகிழ்ச்சி தருவதாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

 

 

முன்னதாக சித்த மருத்துவர் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு பாலித்தினை ஒழிக்கும் விதமாக அனைவருக்கும் இலவச மஞ்சள் பைகளை வழங்கினார்.

 

 

CATEGORIES
TAGS