BREAKING NEWS

மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.

மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.

கெங்குவார்பட்டி பகுதியில் தென்னந்தோப்பில் மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம் அடைந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை காவல்துறை பிடிக்காததை கண்டித்து பலியான இளைஞர் ஜெகதீஸ்வரன் உறவினர்கள் கெங்குவார்பட்டி பகுதியில் சாலை மறியல்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மது அருந்தி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி தாக்கியதில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்தில் பலி, மேலும் வினோத் என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் கொலைக்கு காரணமான நபர்களை காவல்துறை இதுவரையில் கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வருவதாக கூறி பலியான ஜெகதீஸ்வரன் உறவினர்கள் கெங்குவார்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

சம்பவ இடத்தில் இரண்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையினர.

 

CATEGORIES
TAGS