BREAKING NEWS

ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாந்திதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட துளசிநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.84 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் பேவர் பிளாக் சாலை மற்றும்,..

 

 

கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொச்சிலாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.50 லட்சம் மதிப்பிலான புதிய கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடயை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய கவுன்சிலர் ராமர், நகர மன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,

 

 

கிழவிப்பட்டி பஞ்சாயத்து தலைவி வள்ளியம்மாள் கதிரேசன்,மாந்திதோப்பு பஞ்சாயத்து தலைவி முத்துலட்சுமி மணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தெய்வேந்திரன்,முத்துப்பாண்டி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, அதிமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி, அழகர்சாமி, கோபி, பழனிகுமார், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS