400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம், உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள 400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி முன்னிட்டு ஸ்ரீ பூமி நிலா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உடுமலை, ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், ஆண்கள் பாட்டுப்பாடி கோவிலை சுற்றி வந்தார்கள் கோயிலில் நவநீதகிருஷ்ணன் பெருமாளுக்கு பால், தயிர், நெய், இளநீர் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்துபெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள், விரதமிருந்து, தாசர்களுக்கு படி அரிசி, காய்கறிகள் அளித்து வழிபட்டனர். மார்கழி மாதம் முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டனர்.