ஆளுநர் வருகையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு நேற்று மாலை வந்தார். தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள ஆளுநர் இன்று திருவையாறில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் பங்கேற்றார்.
நட்சத்திர விடுதியில் நடைபெறும் விவசாய கூட்டத்திலும் பங்கேற்று உள்ளார். இந்நிலையில் ஆளுநர் வருகையை கண்டித்தும், அவர் உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்எஸ்டிபிஐ கட்சிதமிழ்நாடுதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிதலைப்பு செய்திகள்தியாகராஜ ஆராதனை விழாதிருவையாறுமுக்கிய செய்திகள்