BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்.

மடத்துக்குளம் பகுதி மைவாடி கிராமத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவரும் எம்.சாண்டு நிறுவனங்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கு சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது அதனை தடைசெய்ய வேண்டும்.

 

 

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பி.ஏ.பி. கால்வாயிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் திருடுவதை சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகோட்டை கிராம பகுதியில் 4.92 ஏக்கர் நீர்நிலைபுறம்போக்கை வீட்டுமனை களாக அரசு அதிகாரிகளே பட்டா செய்து கொடுத்துள்ளனர்.

 

 

அமராவதி பிரதான கால்வாயை சேதப்படுத்தி கிராவல் மண்திருடியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு பகுதிகளில் தனியார் போட்டு மில்லில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீர், பொதுமக்கள், கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

 

இதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு சட்டபடி அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைக்கள் வைத்து உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டனர்.

 

CATEGORIES
TAGS