அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கி சேதம்..

கோவை மாவட்டம் வால்பாறை கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கியுள்ளது.
இதை அறிந்தவுடன் வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி செல்வம் அவர்கள் நேரில் சென்று பள்ளியில் யானையால் சேதப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
உடன் வால்பாறை நகராட்சி ஆணையாளர் K. பாலு அவர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் அவர்கள் மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வம் அவர்கள் கருமலை பகுதியின் நகர் மன்ற உறுப்பினர் இரா.சே அன்பரசன் அவர்கள் உடன் இருந்தார்கள் உடனடியாக சத்துணவு கூடத்தை சரி செய்து தரப்படும் என்று கூறினார் மற்றும் குழந்தைகளுக்கு கழிவறை சரி செய்து தருவதாகவும் கூறியுள்ளார்கள்.
CATEGORIES கோயம்புத்தூர்
TAGS கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம்கோயம்புத்தூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வால்பாறை கருமலை எஸ்டேட்