BREAKING NEWS

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு.

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் உட்கோட்டம் கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இவரது சொந்த ஊர் மதுரை 2009 ஆம் வருடம் காவலர் பணிக்கு தேர்வாகி பணிபுரிந்து வருகிறார்.

 

கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விருதுநகர் மாவட்டம் தென்காசி மாவட்ட எல்கையான வேலாயுதபுரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் இன்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பெருமாள் பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்ற இளைஞர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார்.

 

அவரை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்ததை மனதில் வைத்துக் கொண்டு குடிபோதையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வன் காவலரை அறிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார் இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்ட காவலர் தமிழ்ச்செல்வன் சற்று விலகவே தனது இடது கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது.

 

 

இதனை தொடர்ந்து அறிவாளை போட்டு விட்டு காளிராஜ் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார் இதனைத் தொடர்ந்து காவலர் தமிழ்ச்செல்வன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலினை அடுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

மேலும் தப்பி ஓடிய பெருமாள் பட்டியைச் சேர்ந்த காளிராஜை பிடிக்க சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் ஆலோசன்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது மேலும் காளிராஜ் ஓட்டி வந்த பல்சர் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர் கரிவலம் வந்த நல்லூர் காவல் நிலைய போலீசார். இச்சம்பவம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

CATEGORIES
TAGS