BREAKING NEWS

சேரன்மாதேவி வட்டாரப்பகுதியில் அப்பகுதியின் முட்டை மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு.

சேரன்மாதேவி வட்டாரப்பகுதியில் அப்பகுதியின் முட்டை மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு.

தமிழகம் முழுவதுமுள்ள முட்டை விற்பனை நிலையங்கள் மற்றும் முட்டை சார்ந்த உணவு தயாரிப்பு கூட்ங்கள் ஆகியவற்றில் 23.01.23 முதல் 31.01.23 வரை ஒரு வார காலத்திற்கு முட்டை மற்றும் முட்டையினால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை,

 

 

உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஆய்வு செய்ய சென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.R.லால்வேனா உத்தரவிட்டுள்ளதற்கிணங்க, திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலர் மரு.சசிதீபா ஆலோசனையின்பேரில், சேரன்மாதேவி வட்டாரப்பகுதியில் அப்பகுதியின் உணவு பாதுகாப்பு அலுவலர் டைட்டஸ் ஃபெர்னண்டோ நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

இன்று, பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம், பாளையங்கோட்டை தினசரி மார்க்கட் பகுதியிலுள்ள முட்டை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் முட்டையின் தரத்தை திடீர் ஆய்வு செய்தார்.

 

 

ஆய்வின்போது, கடை உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், முட்டையின் தரத்தை தண்ணீரில் போட்டு எப்படி பார்ப்பது, முட்டையில் டார்ச் லைட் வெளிச்சம் பாய்ச்சி அதன் தரத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

 

தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் முழுவதும் இந்த ஒரு வாரம் அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முட்டை மற்றும் முட்டையினால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வார்கள் என திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலர் மரு.சசிதீபா தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS