தேனி ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பெரியகுளம் ஆர்டிஓ சிந்து, மாவட்ட வன அலுவலர் ஷர்மிலி, வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.
தேனி மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேனி மாவட்டத்தில் ரோஜா மலர் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கி ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் மலை மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். அதற்காக வனத்துறையின் தடைகளை புறந்தள்ளி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடி துவங்க உள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
விவசாய நிலங்களில் விளைபொருட்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிக்க உத்தரவு வேண்டும்.
கூட்டு பட்டா தொடர்பான அளவீடு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
ஓடை, குளம் போன்ற நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு முள் வேலிகள் அமைத்து பாதுகாத்து நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கிட வேண்டும்.
கீழ வடகரை பகுதியில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலத்தின் பணிகளை விரைவில் முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வேண்டும்.
வருங்கால தலைமுறையினரை பாதுகாத்திட வீட்டிற்கு ஒரு நாட்டு மாடு வளத்திடவும், கொரோனா போன்ற கொடிய நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட சத்துக்கள் நிறைந்த காய்கறிகளின் பயன்பாடுகளை குறித்து மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விண்ணை முட்டும் உரத்தின் விலையை குறைக்கவும், இயற்கை விவசாயத்தை பாதுகாத்திட மலை மாடுகளை வளர்க்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். வைகை அணை தூர்வார வேண்டும். கரும்பு லோடு லாரிக்கு டோல் கேட்டில் வசூல் செய்யும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் அந்தந்த துறை சார் அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த மாதத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை சார் அதிகாரிகளிடம் விளக்கமும் நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் தேனி ஆட்சியர் முரளிதரன் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய அலுவலரிடம் மனுக்களை வழங்கி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.