ஆண்டிபட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 150 கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் தலைமையாசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பள்ளியில் உள்ள கழிவறைகளை பள்ளி மாணவர்களே சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவால் மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் சுகாதாரத்தை பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி கடும் சட்டங்களை விதித்து வரும் நிலையில்,
பள்ளி கட்டிடத்திற்கு உள்ளேயே செயல்பட்டு வரும் கழிவறையை அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சுத்தம் செய்த வீடியோவால் சமூக ஆர்வலர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில்,
செய்தி உண்மையாக இருக்கும் என்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.