வேப்பூர் அருகே சமுதாய வளையகாப்பு விழா திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கோ.கொத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட கண்டப்பன்குறிச்சியில் நல்லூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, கர்ப்பிணி பெண்களுக்கு நெற்றியில் திலகமிட்டு, மாலை மற்றும் வளையல் அணிவித்து, வளைகாப்பு சீர்வரிசைகள் வழங்கி கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்றும்,
உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருவதை சுட்டிக்காட்டி சமத்துவ வலையை காப்பு விழாவை குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம் பேசுகையில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிவெ. கணேசன், வழிகாட்டுதல் படி நமது நல்லூர் வட்டாரத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்,
தமிழ்நாட்டில் சமூகநீதி, நல்லாட்சி நடைபெறுவதாகவும், அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களும் பயன்படும் வகையில் அரசே கர்ப்பிணி பெண்களுக்கு வலைய காப்பு விழா நடத்துவது போற்றுதலுக்குரியது என்றார்.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரி ரகுநாதன் தலைமை தாங்கினார், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் நாகயோஜன வள்ளி விழாவை தொகுத்து வழங்கினார். விழா முடிந்தவுடன் கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில், அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் பொதுமக்கள், அங்கன்வாடி பொறுப்பாளர்கள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் மாரிமுத்தாள் குணா, அன்பு குமரன், தனசேகரன், பாபு, செந்தில்குமார், மாரிமுத்து, கீழக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன், திருப்பெயர் பெரியசாமி, உட்பட பல்வேறு ஒன்றிய கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.