BREAKING NEWS

பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் 2ஆவது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணிக்கம்பட்டி – ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்தப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த வழியாக குவாரிகளுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் தூசி பரவி காற்று மாசு ஏற்படுகிறது.

 

 

தூசி பரவாமல் இருக்க சாலையில் தண்ணீர் அடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடனடியாக தார் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி கிராம பொதுமக்கள் 2ஆவது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் பலமுறை இது சம்பந்தமாக கோரிக்கை வைத்தும் எவ்வித பயனும் இல்லை. தூசி பரவாமல் இருக்க தற்சமயம் தார்சாலையில் தண்ணீர் மட்டுமாவது அடித்து தூசு பரவுவதை தடுக்க வேண்டும். மாசு பரவி குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இல்லையேல் கிராம மக்கள் ஒன்றிணைந்து நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு சப்இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தை கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS