பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்து இயங்குவது வழக்கம் பேரணாம்பட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்தை இயங்குவது வழக்கம்.
அரவட்லா மலை கிராமத்துக்கு ஆட்டோ வசதிகள் கிடையாது. அரசு பேருந்து ஒன்றுதான் அப்பகுதி மக்களுக்கு ஆதாரம். ஆனால் 25-2-2023 மதியம் வேளையில் இயக்கப்பட வேண்டிய அரசு பேருந்து இயக்கப்படவில்லை.
இதனால் மலை கிராமம்மான அரவட்லா மலைப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ( முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள, பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் பேரணாம்பட்டு அரசு போக்குவரத்து பணிபுரியும் அரசு பேருந்து நடத்துனர்களும், ஓட்டுநர்களும், பெரும்பாலான தப்புகள் செய்கின்றனர்.
என்றும் குறிப்பாக அரசு பேருந்து நடத்துனர்கள் பயணிகளுக்கு மீதி சில்லறைகளை கொடுப்பதில்லை என்றும் இது குறித்து பனிமலை கிளை மேலாளர் கணேஷ் பிரசாத்திடம் புகார் அளித்தால் அவர் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றும்,..
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மீதி சில்லறையை ஏமாற்றும் அரசு பேருந்து நடத்தினார்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளையில் கிளை மேலாளர் கணேஷ் பிரசாத்திற்கு செம பங்கு உண்டு என்றும்..
இப்படியாக பயணிகளுக்கு மீதி சில்லறையை தராமல் ஏமாற்றும் ஒரு சில அரசு பேருந்து நடத்தினார்கள் அதற்கு துணை போகும் பேரணாம்பட்டு அரசு பேருந்து கிளை மேலாளர் கணேஷ் பிரசாந்த் போன்றவர்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.