BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சிறப்பு தனிப்படை காவலர்கள் கைது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சிறப்பு தனிப்படை காவலர்கள் கைது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலைய எல்லையில் பெங்களூர் to
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பூட்டுதாக்கு அன்னை மீரா காலேஜ் எதிரில் உள்ள
ராம்ஸ் கபே டீக்கடை அருகில் 20.10.2018 ந் தேதி காலை 09.00 மணிக்கு ஜஸ்வந்த்
த/பெ பவர்லால், குடியாத்தம் என்பவரை ஏழு நபர்கள் ஒன்று கூடி கடத்தி ரூபாய்
20,00,000/- (இருபது லட்சம்) கூட்டுக்கொள்ளை அடித்தது சம்மந்தமாக வழக்கு பதிவு
செய்து எதிரிகள் ஆறு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

 

இந்நிலையில் ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த எதிரி சுரேஷ் வயது 36
த/பெ முனிசாமி அருந்ததியர் காலனி, வாணியகாட்டூர், இளையநல்லூர், காட்பாடி தாலுக்கா என்பவரை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V.கிரண் ஸ்ருதி உத்திரவின் பேரிலும் ராணிப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல்
 ண்காணிப்பாளர் பிரபு அவர்களின் அறிவுரையின் படி,..

 

ஆற்காடு நகர காவல் வட்ட கலவை வட்ட ஆய்வாளர் S.டீக்காராமன் ஆய்வாளர் D.விநாயகமூர்த்தி (இரத்தினகிரி) அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் S.சேகர் J.உதயசூரியன் (ஆற்காடு நகரம்) மற்றும் போலீஸாரால் 13.03.2023 ந் தேதி எதிரியை கைது செய்யப்பட்டு ஆற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

Share this…

CATEGORIES
TAGS