அம்மூர் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் – 45 கூலி தொழிலாளியான இவரது மனைவி இளவரசி – 35 நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது பிறகு கணவர் மோகன் மற்றும் அவரது உறவினர்கள் அம்மூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் பிரசவ வலி அதிகமாக ஏற்படுவதன் காரணமாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு இளவரசி ஏற்றி சென்று கொண்டிருந்த போது ஆற்காடு SSS தனியார் கல்லூரியின் அருகே இளவரசிக்கு வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ நுட்புநர் மாலதி பிரசவம் பார்த்துள்ளார் அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர் மேலும் பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்து பெண் குழந்தை பெற்றெடுத்த மருத்துவ உதவியாளருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
