மார்ச் 2023 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு.

மார்ச் 2023 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 24.03.2023 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில், ராணிப்பேட்டை பாரதி நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. அ
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை. வேளாண் பொறியியல்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு ராணிப்பேட்டை ஆட்சியர் ச.வளர்மதி கேட்டுக் கொள்கிறார்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.