BREAKING NEWS

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000/- பணம் பறிமுதல்.

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000/- பணம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்:  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர்  ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (20.03.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது,

 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அக்ஸார் பெயிண்ட் ஜங்சன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் தீபன்ராஜ் (24) என்பதும் அவர் அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

 

 

உடனே மேற்படி போலீசார் எதிரி தீபன்ராஜை கைது செய்து அவரிடமிருந்த 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி தீபன்ராஜ் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 4 வழக்குகள் குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS