BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது என ஆர்.காந்தி அறிக்கை.!!

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது என ஆர்.காந்தி அறிக்கை.!!

ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை, சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி தலைமையில் நடக்கிறது.

 

இதில் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

 

இக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், கட்சியின் ஆக்கப் பணிகள் ஆகியவை குறித்து பேசப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

Share this…

CATEGORIES
TAGS