BREAKING NEWS

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சார் ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வையாபுரி குளம் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.

 

தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி திருக்கோயில் துணை ஆணையர் பிரகாஷ் நகராட்சி ஆணையர் கமலா பொறியாளர் வெற்றிச்செல்வி வட்டாச்சியர் சசி
காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் சந்தானத்துரை உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு வையாபுரி குளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருஆவினங்குடிக்கு சொந்தமான தெப்பத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

 

 

இந்நிலையில் நாளடைவில் தெப்பம் மண்மூடி காணப்பட்ட நிலையில் தற்போது விவசாயிகள் சங்கமும் வருவாய் துறையும் இணைந்து மீட்டெடுத்து வருகின்றனர்.

 

இதனை தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் வையாபுரி குளத்தை மீட்டெடுப்பதில் மெத்தனம் காட்டி வருவதாகவும் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் வையாபுரி குளத்தை அழகுபடுத்துவதற்கும் தெப்பத்தை மறுசீரமைப்பு செய்வதற்கும் முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூட்ட நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டன.

 

 

தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் தானாக முன்வந்து வையாபுரி குளத்தை மீட்டெடுப்பதற்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் நிலையில் சமூக ஆர்வலர்களுக்கும் விவசாயிகளுக்கும் கோட்டாட்சியர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார்.

 

இனிவரும் காலங்களில் வையாபுரி குளத்தை அழகு படுத்துவதற்கும் சாக்கடைகள் கலக்காமல் இருப்பதற்கும் அமலைசெடிகளை அப்புறப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கோட்டாச்சியர் சிவக்குமார் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS