BREAKING NEWS

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாககுடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பல முறைபுகார் கொடுத்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 

இது குறித்த தகவல் கிடைத்த அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி நேரில் வர வைத்தனர் பின்பு அதிகாரிகள் கூறியதில் உடன்பாடு ஏற்படாமல் பூலாங்கிணறு பொதுமக்கள்வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டனர்.

 

மேலும் தற்பொழுது வெயில் காலம் அதிகமாக உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யவில்லை என்றால் மேலும் பல்வேறு போராட்டங்கள் சாலை மறியல்கள் நடத்தப் போவதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

 

பூலாங்கிணறு பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதனால் குறைந்த அளவை தண்ணீர் ஒரு சில நேரங்களில் வருவதால் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோளாக உள்ளது என தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS