BREAKING NEWS

பேரணாம்பட்டில் கேரள மாநில முன்னாள் முதன்மை செயலாளர் மாரப்பாண்டியன்படத் திறப்பு விழா.

பேரணாம்பட்டில் கேரள மாநில முன்னாள் முதன்மை செயலாளர் மாரப்பாண்டியன்படத் திறப்பு விழா.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டைச் சேர்ந்த பி.பெருமாள் அவர்களின் இளைய மகனும் இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியர் பெ.சௌந்தர பாண்டியனின் சகோதரரும் கேரள மாநில ஓய்வு பெற்ற முதன்மை செயலாளருமான பெ.மாரப்பாண்டியன், சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார்.

 

மாரப்பாண்டியனின் படத்திறப்பு நிகழ்ச்சி பேரணாம்பட்டியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சபாநாயகரும் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவருமான செ.கு.தமிழரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 

 

இதில் வேலூர் மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் தலைவர் இரா.சி.தலித் குமார்.பழ.ராஜேந்திர பிரசாந்த், செயின் பால்ஸ் மெட்ரிக் பள்ளியில் தாளாளர்‌ எஸ்.நரேந்திர பிரசாத் , T. முத்தரசன், பேரணாம்பட்டு நகர இந்திய குடியரசு கட்சியின் தலைவர் நிருபர் டாக்டர். எஸ். கதிரேசன். உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS