BREAKING NEWS

பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கோவிந்தசாமிக்கு போலீஸ் சார்பில் வரவேற்பு.

பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கோவிந்தசாமிக்கு போலீஸ் சார்பில் வரவேற்பு.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஏப்ரல் 7 பேரணாம்பட்டு சின்னதாமல்செருவு ஊராட்சி பாரதியார் நகரை சேர்ந்தவர் T. கோவிந்தசாமி. இவர் இந்திய பாதுகாப்பு படை வீரராக 37 வருடம் பணியாற்றி விட்டு சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

 

 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி விட்டு நேற்றைய முன் தினம் பணி ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் T. கோவிந்தசாமிக்கு பேரணாம்பட்டு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் சபாரத்தினம், சாலமன், பேரணாம்பட்டு காவல் நிலைய எழுத்தாளர் ஆனந்தன் ஆகியோர்கள் பாரதியார் நகர் நாட்டாமைதாரர். கோவிந்தசாமி, தலைமையிலும் பேரணாம்பட்டு ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை, ஒன்றிய துணை செயலாளர் எம் ஜி ஆர் சரவணன், முன்னிலையிலும் பணி ஓய்வு பெற்று விட்டு பேரணாம்பட்டிற்க்கு வருகை தந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் T. கோவிந்தசாமிக்கு ‌ சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS