பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி.

பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் ஸ்ரீதேவி சிவகெங்கை அம்மன் கோவில் அருகில் உள்ள மக்கள் வாழும் தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தாததாலும் ஒரு தெருவில் சாலை பழுதாகி பெரிய பள்ளம் போல் காட்சியளிக்கிறது.
இந்த வழியாக செல்லும் நபர்கள் ஒரு சில பேர் இந்த பள்ளத்தில் விழுந்து அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே இதுகுறித்து பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்வர்ணலதாவும்,
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் K.நீலா கபிலும் தலையிட்டு உடனடியாக இந்த பள்ளத்தை சரி செய்து சாத்கர் ஊராட்சியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
CATEGORIES வேலூர்
TAGS குற்றம்சாத்கர் ஊராட்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தெருக்களில் கழிவுநீர்பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதிமுக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்