வேட்டைக்காரன் சமூக மக்கள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம்.

வேட்டைக்காரன் சமூக மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட் வேட்டைக்காரன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்காக சுமார் 25 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஏரியில் 4, 5 குடும்பத்தார் ஒன்றாக சேர்ந்து குடிசை தொழிலாக செங்கல் சூலை அமைத்து தொழில் செய்து வந்த நிலையில்,
திடீரென அரசு இவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் நோக்கிலும், வேட்டைக்காரன் சமூக மக்களின் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் அவர்களை கைது செய்து பொய் வழக்கு போட்ட்டுள்ளதாகவும். பொய் வழக்கு போட்டதை வாபஸ் பெற கூறியும், மாவட்ட நிர்வாகத்தின் இச்செயலை கண்டித்தும்,
தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வருகின்றனர். இதில் முன்னாள் எம்எல்ஏவும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் டில்லி பாபு கலந்து கொண்டுள்ளார்.