BREAKING NEWS

ஆசனாம்பட்டு கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு. ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.

ஆசனாம்பட்டு கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு. ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.

திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு; ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள்  ஆவணங்கள் தீயில் கருகி சேதம்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, ஆசனாம்பட்டு கிராமம், தில்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை (வயது 40), இவர் தனது மகனுடன் குடிசை வீடு அமைத்து வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இத்தனை பார்த்த செந்தாமரை கூச்சலிட்டுள்ளார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பற்றி எரிந்துள்ள குடிசை வீட்டின் மீது தண்ணீரை பீச்சு அடித்து தீயை கட்டுப்படுத்த முயற்ச்சித்துள்ளனர்.

 

முயற்ச்சி தோல்வியடைந்த நிலையில் கட்டுக்கடங்காமல் தீ வேகமாக வீடு முழுவதும் பரவி உள்ளது. இதனையடுத்து உடனடியாக ஒடுகத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த நிலைய அலுவலர் குமார் மற்றும் சசிதரன் தலைமையிலான குழுவினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

இதில் வீட்டிலிருந்த கட்டில் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. இது மட்டும் இல்லாமல் அவர்கள் வைத்து இருந்த ஆவணங்களும் தீயில் கருகி முற்றிலும் சேதமானது. இருந்த வீடும் தீயில் கருகியதால் அக்குடும்பம் சோகத்தில் உரைந்துள்ளது. 

CATEGORIES
TAGS