BREAKING NEWS

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.! வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி வழங்கினார்.!

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.! வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி வழங்கினார்.!

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.!

ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் விரைவாக வழக்கின் எதிரியை கைது செய்தும் விரைவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு வழக்கினை கொண்டு சென்றதற்காகவும் ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வசூர் ராஜா த/பெ ஆறுமுகம் வேலூர் என்பவரை அறிவிக்கபட்ட குற்றவாளியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தற்காகவும்,

 

வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி அவர்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு வருகை தந்து சிறப்பாக பணிபுரிந்த ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் வினாயகமூர்த்தி ஆகியோர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

 

 

இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா மற்றும் தனி பிரிவு காவல் ஆய்வாளர் அருண் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

 

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS